கொரோனா பலி எண்ணிக்கை


சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சைபெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் பழனியின் உடல் நலம் குறித்து, அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்தார்.


உடல்நலத்தை நன்கு பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்திய அவர், அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை அளிக்கும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதனை கேட்டறிந்த  சட்டமன்ற உறுப்பினர் பழனி, முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  


**********************************


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்வு!


தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 435ஆக அதிகரிப்பு!


*************************************


கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக 3 பேர் பிரகாஷை அனுகியுள்ளார். 2 மணி நேரத்திற்குள் இ பாஸ் எடுத்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பிரகாஷ் பெற்றுள்ளார்.


பின்னர் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று போலி இ பாஸ் தயார் செய்து 3 பேரையும் தனது காரில் அழைத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். 


கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடன்  வைத்திருந்த இ-பாஸை சோதனை செய்தபோது அது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


************************************


ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 2000 செவிலியர்களுக்கு, 6 மாதகால பணி நியமன ஆணைகளைகளையும், கொரொனா தொற்றால் உயிரிழந்த அரசு செவிலியர் ஜான் பிரிசில்லா குடும்பத்துக்கு, 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும் விஜயபாஸ்கர் வழங்கினார்.


தமிழகத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை, என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


**************************************


மதுரை மாவட்டத்தின் எல்லையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலிருந்து, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்களை கண்காணிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய கொரோனா சோதனை சாவடியானது மேலூர் அருகே சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் செயல்பட்டு வருகின்றது.


இந்நிலையில் இன்று வாகனங்களை ஒவ்வொன்றாக ஒழுங்குபடுத்தி சோதனை செய்த போது சென்னை பூம்பூகாரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மீன் ஏற்றி வந்த வேன் அதிவேகத்தில் வந்து கட்டுபாட்டை இழந்து சோதனை சாவடியில் நிறுத்தியிருந்த வாகனங்கள் மோதி விபத்தானது. 


************************************