உடுமலை சங்கர் கொலை வழக்கு என்பது உடுமலைப்பேட்டை சங்கர் என்பவர் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதற்காகக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்காகும்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா, கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று சமூகத்தை சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.
இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.
இந்தக் காணொளிக் காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதில் சங்கர் உயிரிழந்தார், படுகாயங்களோடு கவுசல்யா உயிர் தப்பினார். மனவேதனையினால் கௌசல்யா மே 12 ஆம் நாள் தற்கொலை முயற்சி செய்து நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார்.
வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றது. படுகொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.
இவ்வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு 2017 டிசம்பர் 13 இல் தீர்ப்பு வெளியானது.அதில் 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகிய 6 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு; நீதியை நிலைநாட்டிய கோர்ட்"
கௌசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியமும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்குச் சத்துணவுத் துறையில் வேலையும் தமிழக அரசு வழங்கியது.
மார்ச் 13 2018 ல் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை என்ற பெயரில் தனிப்பயிற்சி மையத்தை கௌசல்யா தொடங்கினார்.
2018 டிசம்பர் 9 ஆம் நாள் சக்தி என்பவரைக் கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்.