சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக ஏற்கெனவே சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளோடு, முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.