6 மாதங்களுக்கு சலுகை கொடுங்க - தமிழக அரசு?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படுகிறது.
இது பகல் கொள்ளை என்று மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து கொந்தளிப்பது அதிமுக அரசின் காதுகளில் விழவில்லையா? கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை நம்பிய அப்பாவி பொதுமக்களுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாகியுள்ளது.
ஆனால் இப்போது மின் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் அறிவிக்கப்பட்ட முறையில் உத்தரவாதம் தரப்பட்டபடி மின்கட்டணம் வசூல் செய்யாமல் குறிப்பாக யூனிட்டை கழிக்காமல் வெவ்வேறான வீதப்பட்டியல் அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.