குறுஞ் செய்திகள்- அமைச்சர் ஓட்டுநருக்கு கொரோனா

 



ஆரணிக்கு  காரில் சென்றுகொண்டிருந்தபோது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கார் ஓட்டுநருக்கு கொரோனா உறுதியானதால் பாதி வழியில் வேறு காரில் சென்றார்



 


தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினரின் செயல்பாட்டிற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதிமுக ஆட்சியில் சிறையில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட போலீசாரால் தாக்கப்பட்டு இறப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது என்றும் கூறினார். 


சாத்தான்குளம் வணிகர்கள் உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றம் செல்ல திமுக தயாராக உள்ளது  என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி


 



போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரைத் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திமுக அறிவித்த ரூ.25 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.


_________________


.



 


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது.


தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.


 



கோவையில் எம்.ஜி.ஆர். காய்கனி மார்க்கெட் வளாகத்தில் உள்ள தனியார் வாகன நிறுத்துமிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் வளாகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


_________________


கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டிஸ்சார்ஜ்