இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,519 மாதிரிகள் பரிசோதனை - இதுவரை 57,74,133 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது - ஐசிஎம்ஆர்
*****************
கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்
******************
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424ஆக உயர்வு
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379லிருந்து 1,69,798ஆக உயர்வு
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195ருந்து 9,520ஆக உயர்வு -மத்திய சுகாதார அமைச்சகம்
*********************
புதுச்சேரியில் 200-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு...!
புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 202 ஆக அதிகரிப்பு
********************
செய்யாறு அரசு பேருந்து பணிமனையை சேர்ந்த 5 நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
* நடத்துனர்களுக்கு கொரோனா காரணமாக செய்யாறு பேருந்து பணிமனை மூடல் * இன்று முதல் 3 நாட்களுக்கு பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிப்பு..
*******************
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டது
* தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்த பத்திரிகையாளர் சிலருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை மூடல்
*********************
தெலங்கானாவில் நேற்று ஒரேநாளில் 23 பத்திரிகையாளர்கள் உள்பட237 பேருக்கு பாதிப்பு