கொரோனா சிகிச்சைக்கு கட்டணம்


 


தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி!


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைகான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனையில் உள்ள 50 சதவீத படுக்கைகளை அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், தமுமுக தலைவர் ஜவஹிருல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் மருத்துவமனைகளை வழக்கில் சேர்க்கவில்லை எனவும், எந்த அரசாணையையும் மனுதாரர் எதிர்க்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதே போன்ற வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளதால், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.