தமிழகத்தில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,036 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ( டெல்லி 2, மகாராஷ்டிரா 40, கர்நாடகா 8, ஆந்திரா 3, கேரளா 2) 55 பேரும் அடக்கம். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை:
தமிழகத்தில் 02.06.2020 13 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகும்.
12,000 - தொட்ட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை :
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 536 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்தது. தற்போது 10,680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.