கொரோனா பாதிப்பு நிலவரங்களில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மை


கொரோனா பாதிப்பு நிலவரங்களில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


சென்னை தலைமை செயலகத்தில் பேசிய அவர், கொரோனா நிலவரம் குறித்து வெளியிடப்படும் செய்திக்குறிப்பை ஐ.சி.எம்.ஆர் பாராட்டியிருப்பதாக  கூறினார். ஆக்கப்பூர்வமான யோசனைகள் அளித்தால், அரசு செயல்படுத்த தயாராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். சென்னையில் 30 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து, இணையதளத்தில், சிகிச்சை கட்டணத்தை வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.


தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுகிறது - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்குறிப்பிட்டார்.