கருப்பின இளைஞர்-சுட்டுக்கொலை!


ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் Rayshard Brooks என்ற 27 வயது கருப்பின இளைஞர், வெண்டிஸ் உணவகம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, அதில் படுத்து தூங்கியுள்ளார்.


அவரது காருக்கு பின்னால் மற்ற கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், Rayshard Brooks-ஐ விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.


ஆனால், போலீசாருடன் செல்ல மறுத்த ப்ரூக்ஸ், அங்கிருந்து தப்பியோட முயன்று இருக்கிறார். இதனால், போலீஸ் அதிகாரிகளுக்கும், கருப்பின இளைஞர் ப்ரூக்ஸ்க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.


உடலில் பட்டதும் ஷாக் அடிக்கும் துப்பாக்கியை Rayshard Brooks மீது பயன்படுத்தி உள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.


இதில் இருந்து தப்பித்து அங்கிருந்து வேகமாக ஓடியுள்ளார் ப்ரூக்ஸ். அவரை பின்தொடர்ந்து துரத்திய போலீஸ் அதிகாரிகள், எதை பற்றியும் யோசிக்காமல் சில மீட்டர் தூரத்திற்குள்ளேயே ப்ரூக்ஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். குண்டுகள் உடலை துளைத்ததும், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் அந்த கருப்பின இளைஞர் Rayshard Brooks.



கடந்த 27ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பத்தை தொடர்ந்து, நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்ட நெருப்பு, இன்று வரை அணையவில்லை. ஜார்ஜ் பிளாய்ட் புதைக்கப்பட்ட மண்ணில் ஈரம்கூட காயாத நிலையில் அமெரிக்காவில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.