கன்னியாகுமரி மாவட்ட பரைகோடு பகுதியில், வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையடிக்க வந்த இளைஞரை அடையாளம் கண்டனர்.
இந்தநிலையில், இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் புதியதாக ஒரு இளைஞர் தூங்கிக் கொண்டிருந்ததை கண்ட அப்பகுதியினர் அவரை மடக்கிப்பிடித்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கேரளாவைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் என்பது தெரியவந்தது.
வீடுகளில் நகை, பணம் கிடைக்காததால், மீன் குழம்பு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு, தன்னை மறந்து உறங்கிய போது சிக்கிக்கொண்டதாக வாக்குமூலம் அளித்தார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.