வழிபாட்டு தலங்களில்.. - நெறிமுறைகள்


வழிபாட்டு தலங்களில்.. ஜூன் 8ஆம் தேதி முதல்.. கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..!!


வரும் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் நாடு முழுவதும் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


நெறிமுறைகள் :


வழிபாட்டு தலங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும்.


வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்கள் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயம்.


வழிபாட்டு தலங்களில் நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.


வழிபாட்டு தலத்திற்குள் முகக்கவசம் அணிந்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.


வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்கள் தங்கள் செருப்பு, ஷூ போன்றவற்றை தாங்கள் வரும் வாகனத்திலேயே விட்டுவிடலாம்.


தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ வழிபாட்டு தலத்திற்கு நடந்து வந்திருந்தால், செருப்புகளை தனியாக வைக்க வேண்டும்.


புனித நூல்களை தொடுதல், சிலைகளை தொடுதல் போன்றவற்றிற்கு அனுமதிக்கக்கூடாது.


கூட்டமாக கூடுதல், கூட்டமாக நின்று வழிபாடு செய்தல் போன்றவற்றிற்கு தடை செய்யப்படுகிறது.


பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்கள் ஒலிபரப்பலாம். ஆனால், குழுவாக பக்தி பாடல்களை பாடுவது அனுமதிக்கப்படாது.


வழிபாட்டு தலத்திற்குள் நுழையும்போது வரிசையில் நின்றால் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.


வழிபாட்டு தலங்களில் வாகனங்களை நிறுத்துமிடங்களில் முறையாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அதை கண்காணிக்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வழிபாட்டு தலங்களுக்கு வெளியே இருக்கும் தேநீர் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.


வழிபாட்டு தலங்களில் சமூக விலகலை கடைபிடித்து வரிசையில் நிற்க வேண்டும் அல்லது அமர வேண்டும்.


வழிபாட்டு தலத்தில் நுழைவு வாயில் தனியாகவும், வெளியேறும் வாயில் தனியாகவும் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.


வழிபாட்டு தலத்தில் ஒருவொருக்கொருவர் கை குலுக்கி, அரவணைத்து வாழ்த்து கூறுதல் கூடாது.


வழிபாட்டு தலத்தில் பொதுவான தரை விரிப்புகளில் நின்று வழிபாடு செய்வதற்கு பதிலாக அனைவரும் தனித்தனியாக தரைவிரிப்புகளை பயன்படுத்தி அதை திரும்ப எடுத்து செல்ல வேண்டும்.


வழிபாட்டு தலத்தில் இருக்கைகளை சமூக இடைவெளி விட்டு அமைக்க வேண்டும்.


வழிபாட்டு தலத்தில் குளிர்சாதன வசதி இருந்தால் 24 முதல் 30 டிகிரி வரை இருக்குமாறும், ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரை இருக்குமாறும் வைக்க வேண்டும்.


வழிபாட்டு தலத்திற்குள் புனித நீர் தெளிப்பது, வழங்குவது, பிரசாதங்களை கைகளால் வழங்குவது அனுமதிக்கப்படாது.


சமுதாய உணவுக்கூடம், லாங்கர் போன்றவற்றில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.


வழிபாட்டு தலங்களை பராமரிக்கும் நிர்வாகம் அடிக்கடி அதை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.


குறிப்பாக தரைப்பகுதியை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


வழிபாட்டு தலங்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகக்கவசம், கையுறை போன்றவற்றை முறையாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.