தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19முதல் மீண்டும் பொது முடக்கம்
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும்
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் முழு ஊரடங்கு
சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை அடுத்து டாக்ஸிகள், தனியார் வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
19ம் தேதியில் இருந்து 30ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு
பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்கப்படும்.
எந்த தனியார் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. ஆனால் இவை அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது
சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை