தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூரில் நடந்த உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவருக்கும், அவரது குடும்பத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது
முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும். இதுகுறித்து ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் 'ஐந்து கட்ட ஊரடங்கிற்கு பின்னும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், முதல்வர் திணறுகிறார் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் அலுவலகத்தில், முதுநிலை தனிச்செயலராகப் பணியாற்றி வந்த, பி.ஜே.தாமோதரன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை முழுமையாக, எப்போது கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு, 'இறைவனுக்கு தான் தெரியும்; நாம் என்ன டாக்டரா?' என, பத்திரிகையாளர்களை நோக்கி, முதல்வர் கேட்டுள்ளார்.
மக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.