பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வுப்பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤கை தொடா வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் தினசரி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
➤37 டிகிரி செல்சியஸூக்கு மேல் வெப்பநிலை இருக்கும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤ கொரோனா இல்லாமல், சாதாரண இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால், அந்த மாணவரை பிற மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி, தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
➤பேருந்துகளில் மாணவர்களை ஏற்றும் முன்பும், இறக்கி விட்ட பின்பும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்,
➤ஒரு பேருந்தில் 60 சதவீத மாணவர்களை மட்டுமே ஏற்ற வேண்டும்.
➤இருமல், காய்ச்சல் உள்ள மாணவர்களை பேருந்தில் ஏற்றக் கூடாது, முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அடையாள அட்டை, ஹால் டிக்கெட் கட்டாயம் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது