இன்றைய ராசி பலன்
மேஷம்:
வழக்கு சம்மந்தமாக உங்கள் பக்கம் தீர்ப்பு கிடைக்கும். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் கண், சிறுநீரக தொற்று சம்மந்தமாக உபாதைகள் வந்து போகும். பாதியில் நின்ற கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள். சொந்த பந்தங்களின் குடும்ப விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது உத்தமம்.
ரிஷபம்
சனி, குரு, கேது மூவரின் அமைப்பு காரணமாக அலைச்சல், அதிருப்திகள் இருக்கும். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் பெண்களுக்கு தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம். கணவன், மனைவி இடையே சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும்.உத்தியோகத்தில் நிறைகுறைகள் இருக்கும். வேலைச்சுமை, பயணங்கள், அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்:
ராசியில் கூட்டுக் கிரக சேர்க்கை இருப்பதால் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். பிள்ளைகள் செயல்பாடுகள் காரணமாக வருத்தங்கள் வந்து நீங்கும். புதன் ஆட்சி பலத்துடன் இருப்பதால் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள். செவ்வாய் அமைப்பு காரணமாக சொத்து விஷயமாக அவசர முடிவுகள் வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. .
கடகம்:
யோகாதிபதி செவ்வாயின் பார்வை காரணமாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் புதிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் காரணமாக வரவேண்டிய பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். சனி, கேது இருவரின் அமைப்பால் சாதகமான மாற்றம் வரும். .
சிம்மம்:
செவ்வாய், சூரியன் இருவரும் சாதகமாக இருப்பதால் உங்கள் திட்டங்கள் எல்லாம் முழுமையாக வெற்றியடையும். சகோதரி திருமண விஷயமாக நல்ல இடம் சம்மந்தம் கூடி வரும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். . சனி, கேது இருவரின் அமைப்பு காரணமாக சிந்தனைகள் அதிகரிக்கும். பேரன், பேத்திகள் மூலம் செலவுகள் உண்டாகும். எதிர் பார்த்த பணம் புதன்கிழமை கைக்கு வரும்.
கன்னி:
பெண்களுக்கு கருப்பை, தைராய்டு சம்மந்தமான கோளாறுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் உண்டாகும். தாய் வழி உறவுகளிடையே சில மன வருத்தங்கள் வரலாம். பயண திட்டங்களில் திடீர் மாற்றங்கள் வரும். சுக்கிரன், சூரியன் இருவரின் சேர்க்கை காரணமாக வீண் செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள்.
துலாம்:
ஏற்ற இறக்கம், நிறை குறைகள் உள்ள நேரம். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் மனதில் இனம் புரியாத கலக்கம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் திடீர் பயணமாக சொந்த ஊர் வருவார்கள். புதன் பலமாக இருப்பதால் எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவீர்கள்.மாமனார் மூலம் மகிழ்ச்சி உதவிகள் கிடைக்கும். ராகு, கேது இருவரின் அமைப்பு காரணமாக எதிர் பார்த்த பணம் வசூலாகும்.
விருச்சிகம்:
ஏழாம் இடத்தில் சுக்கிரன், சூரியன் இருப்பதால் எதிலும் நிதானம் கவனம் தேவை. கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை மீட்பீர்கள். சகோதர உறவுகளால் செலவுகள், அலைச்சல் இருக்கும்.
தனுசு:
சனி, குரு, செவ்வாய் மூவரின் சஞ்சாரம் காரணமாக தடைப்பட்டு வந்த சில விஷயங்கள் தானாக கூடி வரும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வசதியான ஃபிளாட் அமையும். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள்.
மகரம்:
சனி, குரு இருவரின் சஞ்சாரம் காரணமாக சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய நகை, பணம் கைக்கு வரும். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு அமைப்பு உள்ளது. கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பது மிகவும் அவசியமாகும்.
கும்பம்:
செவ்வாய் ராசியில் இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். வரன் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பொருத்தமான சம்பந்தம் கூடி வரும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுவார்த்தைகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும். சனி, குரு அமைப்பு காரணமாக அவசிய, அநாவசிய செலவுகள் இருக்கும்
மீனம்:
கிரக சேர்க்கைகள், சாரபலம் காரணமாக நிறைகுறைகள் இருக்கும். மனைவி வகையில் மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். உத்தியோக வகையில் திடீர் வெளியூர் இடமாற்றம் வரும். செவ்வாய் 12ல் இருப்பதால் பணத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும்.
சந்திராஷ்டமம்: 2.6.2020 காலை முதல் 4.6.2020 வரை.
மோகனா செல்வராஜ்