சில செய்திகள்


 


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 49 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..


*************************


ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 43வது மறுசீரமைக்கப்பட்ட அமர்வு ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்யன் பங்கேற்று பேசினார். 


பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. 


**************************


ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.


தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஒற்றைக் காட்டு யானை வழிமறித்தது. சிறிது நேரம் அங்கேயே நின்ற யானை, சாலையை விட்டு நகர மறுத்தது. பின்னர், வனப்பகுதியில் நுழைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


*****************************



கொரோனாவிலும் அரசியல் செய்து, முன்களப்பணியாளர்களைச் சோர்வடையச் செய்யும் அக்கிரமத்தை தி.மு.க செய்துவருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.


தனிமனித இடைவெளியை வலியுறுத்தும் வீட்டில் இரு, விலகி இரு, விழிப்பாய் இரு என்கிற முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் வா என்று ஒவ்வாத வசனம் பேசியவர் ஸ்டாலின் என்றும், அரசின் கட்டுப்பாட்டை மதிக்காமல் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று, நிவாரணம் வழங்குகிற பெயரில் ஒட்டுமொத்த சென்னை மக்களின் நிம்மதியைக் கெடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு தொற்றுபரவ ஸ்டாலினின் அதிகார வெறியே காரணம் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 


**********************