குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - களையிழந்த சீசன்!
குற்றாலத்தில் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலம் என்றாலும், ஊரடங்கு உத்தரவால் குற்றாலம் களையிழந்து காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.