கூட்டாட்சி தத்துவத்தின் கடமை பொறுப்புகளை நிறைவேற்ற மத்திய அரசு எண்ணவில்லை திமுக தலைவர் மு க ஸ்டாலின்


‘நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏழை, எளிய மக்கள் கைவிடப்பட்டுவிட்டார்களே என்ற ஏமாற்றத்தை தருகிறது’


பெரிய மீட்பு திட்டம் என பிரதமர் முழங்கியதற்கும்,நிதியமைச்சரின் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை;கூட்டாட்சித் தத்துவத்தின் கடமை, பொறுப்பை நிறைவேற்ற மத்திய அரசு எண்ணவில்லை
- ஸ்டாலின்


                  +++++++++++++++++


      (மேலும் முக்கிய செய்திகள்)


அரசு அளித்த கொரோனா எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.


                     ++++++++++++++++


அமெரிக்காவில் ஒரே தேவாலயத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


                       +++++++++++++++


கொரோனா வைரஸ் இயற்கையிலிருந்து உருவாகவில்லை, அது செயற்கையாக உருவாக்கப்பட்டது என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.


                      ++++++++++++++++++


பழக்கடைகளை சேதப்படுத்தி விட்டு வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் மாற்றம்


* வாணியம்பாடி நகராட்சி ஆணையராக மேல்விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபு பொறுப்பு வகிப்பார்


                      ++++++++++++++++


 


ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சர் எதையும் அறிவிக்கவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


                    ++++++++++++++++++


’சென்னையில் 4 வட்டாட்சியர்களுக்கு கொரோனா’


சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் 4 வட்டாட்சியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது


                     ++++++++++++++++++