சர்வதேச விமான போக்குவரத்து எப்போது: மத்திய அமைச்சர் பதில்


சர்வதேச விமான போக்குவரத்து எப்போது: மத்திய அமைச்சர் பதில்

புதுடில்லி: கொரோனா தொற்று யூகிக்கும் வகையில் இருந்தால், ஜூன் மத்தியில் அல்லது ஜூலை இறுதியில் சர்வதேச விமான போக்குவரத்து துவங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது : சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவதற்கு ஆகஸ்ட் - செப்டம்பர் வரை ஏன் காத்திருக்க வேண்டும். சூழ்நிலை மேம்பாட்டால், வைரஸ் தொற்று யூகிக்கும் வகையில் இருந்து, வைரசுடன் மக்கள் வாழ பழகி கொண்டால், சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்படும். ஜூன் மத்தியில் அல்லது ஜூலை இறுதியில் ஏன் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்கக்கூடாது. உள்நாட்டு விமான பயணிகள் மொபைல் போனில் இருக்கும் ஆரோக்கிய சேது செயலியில் ஸ்டேட்டஸ் பச்சையாக இருந்தால், அவர்கள் தனிமையில் இருக்க வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.