மாஸ்க் போடாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் - காவல் ஆணையர் அறிவிப்பு


மாஸ்க் போடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் - காவல் ஆணையர் அறிவிப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 ஆக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மாஸ்க் போடாமல் நடந்து செல்பவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.