தமிழகச் செய்தி துளிகள்


புதுக்கோட்டையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது


சென்னையில் காதலன், பிறந்த நாள் கேக் வெட்ட வராததால்  பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 


* மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைப்பு


* அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைப்பு - சென்னை மாநகராட்சி


பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும்


கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்


பொதுமுடக்கத்தை நீட்டித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும்


-டிடிவி தினகரன்


கடந்த இரு மாதங்களாகச் செய்தித்தாள் ஊடகங்களுக்கு 4500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்


கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி திருவாரூரில் இருந்து மியான்மர் நாட்டைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


வருகிற 3ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்க அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கை தாக்கல்


கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு