கோடையை சமாளிக்க. சில டிப்ஸ்

கோடையை சமாளிக்க... என்னென்ன செய்ய வேண்டும்?
கோடைக்காலத்தை சமாளிக்க என்னென்ன செய்யலாம்?
🌞 கோடைக்காலத்தை சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.🌞 நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.🌞 காரம் நிறைந்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.🌞 அலுவலகத்திற்கு செல்பவர்கள் சீரக தண்ணீரை பருகினால் வெப்பத்தினால் ஏற்படும் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.🌞 குளிர்ந்த நீரை குடிக்க நினைப்பவர்கள் பானையில் ஊற்றி வைத்து குடிப்பதால் உடல்நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாது.🌞 கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது அவசியம்.🌞 பகல் நேரங்களில் இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை குடிக்கலாம்.🌞 ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழச்சாறு எடுத்து கொள்ளலாம்.🌞 உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்களை அதிகமாக சாப்பிடலாம். முக்கியமாக தர்பூசணி, தக்காளி, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்கலாம்.🌞 வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.


🌞 பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.🌞 கோடைக்காலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.🌞 டிபன் 8 மணி, மதிய உணவு 1 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.🌞 வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஆடைகளை அணிந்து கொள்ளவது நல்லது.🌞 வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் உடன் கொண்டு செல்வது அவசியம்.


🌞 அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது அல்லது குறைத்து கொள்வது உடல்நலத்தை காக்கும்.


வடிவமைப்பு :மோகனா செல்வராஜ்