இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கியது
* கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை - 85,940
* 30,153 பேர் கொரோனா வைரஸில் இருந்து
மீண்டுள்ளனர்
++++++++++++++++
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்தவர்களில் 90% பேர் அறிகுறிகளின்றி பாதிப்புக்குள்ளான நிலையில், நோய்க்கான அறிகுறிகள் உள்ளோரை மட்டுமே அரசு பரிசோதித்து வருவதாக தகவல்
+++++++++++++++
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று மாலை புயலாக உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
+++++++++++++++
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக ரோபோக்களை ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
+++++++++++++
திருச்சி அருகே தாயின் கண் எதிரே குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+++++++++++++++
பாபர் மசூதி இடிப்பு வழக்கை காணொலிக் காட்சி மூலம் நடத்தத் திட்டம்
+++++++++++++++++
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் மது விற்பனை தொடங்கியது
சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படவில்லை
மால்கள், வணிக வளாகம், கொரோனா கட்டுப்பாட்டு பகுதியிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை
++++++++++++++
சேலம் மாநகராட்சியில் மட்டும் 50 டாஸ்மாக் கடைகள் திறப்பு
கிருமிநாசினி கையில் தெளிக்கப்பட்ட பின்னரே மது வாங்க அனுமதி; டோக்கனில் மது வாங்க வரும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது
+++++++++++
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 135 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.