இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மேலும் சில் முக்கிய செய்திகள்


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கியது


* கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் 
எண்ணிக்கை - 85,940


* 30,153 பேர் கொரோனா வைரஸில் இருந்து 
மீண்டுள்ளனர்


                 ++++++++++++++++


தமிழகத்தில் கொரோனா சோதனை செய்தவர்களில் 90% பேர் அறிகுறிகளின்றி பாதிப்புக்குள்ளான நிலையில், நோய்க்கான அறிகுறிகள் உள்ளோரை மட்டுமே அரசு பரிசோதித்து வருவதாக தகவல்


              +++++++++++++++


வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.


இன்று மாலை புயலாக உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


               +++++++++++++++


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக ரோபோக்களை ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.


                  +++++++++++++


திருச்சி அருகே தாயின் கண் எதிரே குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


              +++++++++++++++


பாபர் மசூதி இடிப்பு வழக்கை காணொலிக் காட்சி மூலம் நடத்தத் திட்டம்


               +++++++++++++++++


தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் மது விற்பனை தொடங்கியது


சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படவில்லை


மால்கள், வணிக வளாகம், கொரோனா கட்டுப்பாட்டு பகுதியிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை


                    ++++++++++++++


சேலம் மாநகராட்சியில் மட்டும் 50 டாஸ்மாக் கடைகள் திறப்பு


கிருமிநாசினி கையில் தெளிக்கப்பட்ட பின்னரே மது வாங்க அனுமதி; டோக்கனில் மது வாங்க வரும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது


                        +++++++++++


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 135 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.