பொதுத்துறை வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும்: ராமதாஸ் 


பொதுத்துறை வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும்: ராமதாஸ் 


கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில் பொதுத்துறை வங்கிகளில் நகை கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நகைகளை அடகு வைப்பதன் மூலமே எளிதாகக் கடன் கிடைக்கும் நிலையில், தனியார் நகை கடைகளில் மிக அதிக அளவு வட்டி வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.


அதிக வட்டிக்கு கடன் வாங்கும் ஏழைகளால் கடன் சுமையில் இருந்து மீள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.ஆனால் பொதுத்துறை வங்கிகளில் நகைக் கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுவதாகவும், அதே சமயம் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது வானத்தை வில்லாக வளைப்பதற்கு ஒப்பானது எனவும் கூறியுள்ளார். எனவே, பொதுத்துறை வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.