இவரின் நினைவு தினம் இன்று...!முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு
🌟 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
🌟 இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாளை இந்தியக் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
🌟 இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1945) ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார்.
🌟 நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரைப் பிரதமராக பணியாற்றினார். இவர் 1951ஆம் ஆண்டு இந்திய திட்டக்குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கினார்.
🌟 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது" என்பதை நன்கு உணர்ந்து அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்திய நேரு அவர்கள், 1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி மறைந்தார்.