இஎம்ஐ எனப்படும் தவணைகள் மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 விழுக்காடு குறைத்து, நான்கு விழுக்காடாக ஆக்கியுள்ளது. கடன்களுக்கான இஎம்ஐ எனப்படும் தவணைகள் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.