நாளை புனித ரமலான்  25.05.2020 - இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து


நாளை புனித ரமலான் 


ரமலான் நோன்பு என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம்  முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.   இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எல்லா வணக்கங்களும் அல்லாவுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். ரமலான் நோன்பு உண்மையான இறையச்சத்தோடும் மனத்தூய்மையுடனும் இருப்பதால் அது தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மட்டும் நோன்பாகாது.இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.


கொரோனாவால் சந்தித்து வரும் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வது அனைவரின் கடமையாகும்


இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரமலான் வாழ்த்து


* ஈகை திருநாளில் அன்பும், மகிழ்ச்சியும் தழைக்கட்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் - ஆளுநர் பன்வரிலால் புரோஹித்


இஸ்லாமிய மக்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ரமலான் வாழ்த்து


* கொரோனாவால் சந்தித்து வரும் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம் - சரத்குமார்