*பொதுமக்களை வீட்டில் இருக்க விழிப்புணர்வு செய்த உதவி ஆணையர்*
சென்னை மகாகவி பாரதியார் நகரில் கொரோனோ தொற்று நோயை வெல்ல எதிர்ப்பு சக்தியை தூண்டும் விதமாக பொது மக்களுக்கும், காவல்துறையினருக்கும் கபசுரநீரினை உதவி ஆணையர் G.ஹரிகுமார் வழங்கினார்.
மேலும் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டில் விட்டு வெளியே வராமல் விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக் கொண்டார்.
கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தமாக கழுவிடவும், தொற்று நோயில் இருந்து காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் அனைவரும் நோக்கும் வகையில் "மாஸ்க் அணிக, கைகளை சுத்தமாக கைழுவவும் என்ற விழிப்புணர்வு வாசகம் கொண்ட ராட்சத பலூன் ஒன்றினையும் பறக்க விட்டார்.
இதில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆப்ரஹாம் கிருஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேலும் சில செய்தித் துளிகள்
ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,36,426 வழக்குகள் பதிவு
* 3,01,111 வாகனங்கள் பறிமுதல் - 3.47 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு
* 3,55,603 பேர் கைதாகி விடுதலை
வங்கிக் கடன் தள்ளுபடி விவகாரம் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
'நல்லோர் கூடம்' எனும் மெய்நிகர் மன்றம் தொடக்கம் - மு.க. ஸ்டாலின்
அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு : அம்மா உணவகத்தின் மூலம் 85 லட்சம் பேர் பயன்
ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி
* தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி
* மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு