முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு


       முல்லைப் பெரியாறு அணையில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட 4 அமைச்சர்கள் ஆய்வு!


தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு 11.30 மணிக்கு சென்றார்.  அங்கிருந்து படகில் பயணம் செய்து  முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றுள்ளார்.


அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  உணவுத்துறை அமைச்சர்  அர.சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சா் மூர்த்தி, எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், மதுரை வடக்கு தளபதி, சோழவந்தான் வெங்கடேஷ், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றுள்ளன


பேபி அணையை பலப்படுத்திய பின்பு முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேட்டி


கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை - அணையில் ஆய்வு செய்த பின்பு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேட்டி


80 வயதிலும் நான் நேரில்சென்று ஆய்வு  செய்துள்ளேன்


கேரள அரசும் - தமிழ்நாடு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும். பிரனாயி விஜயன் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்


- அமைச்சர் துரைமுருகன்


நிருபர் மணிவண்ணன்