வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு - உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என நீதிபதிகள் கருத்து
வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசவாமி, கே. முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.
நிருபர் பாலாஜி