கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது தமிழக மருத்துவத்துறை

 


         தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். வழக்கத்தை விட இரு மடங்கு, 3 மடங்கு மக்கள் இன்று தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். 


தொடர் விழிப்புணர்வு மூலம் தமிழகம் முழுவதும் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் 8.30 மணி வரை செயல்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழ்நாட்டில், இன்று ஒரேநாளில் மாலை 6.30 மணி நிலவரப்படி 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.