அமைச்சர் சேகர்பாபு, 'செயல்பாபு' என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறினார்

 


     அர்ச்சகர்கள், பட்டாச்சியார்கள், பூசாரிகளுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்துள்ளார்.


அதன்பின்னர்,முதல்வர் பேசியதாவது:


"மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செய்ய அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த நான் சென்றாக வேண்டும்.எனவே,எனது உரையை சுருக்கமாக கூறுகிறேன்.


நமது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்,இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி பணியாற்றுகிறார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.எனவே,அவரை சேகர் பாபு என்று அழைப்பதை விட 'செயல் பாபு' என்றே அழைக்கலாம்.


அந்த பெயருக்கு முழு தகுதிப் படைத்தவராக அவர் விளங்கி கொண்டிருக்கிறார்.சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை அறிவித்து ஒரு வார காலமே ஆகிறது.எனினும்,சட்டமன்ற கூட்டதொடர் முடிவு பெரும் முன்னேரே ஒரு திட்டம் செயல்படுகிறது என்றால் அது இந்த திட்டம்தான். 'எள் என்றால் எண்ணையாக இருப்பார்கள்' என்று கூறுவது வழக்கம் .ஆனால்,சேகர்பாபு எள் என்று சொல்வதற்கு முன்கூட்டியே எண்ணையாக நிற்க கூடியவர் அவர்.



இந்து சமய அறநிலையத்துறை கொடுத்துவைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபுவால் மாறிவிட்டது. 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அமைச்சராக அவர் இருக்கிறார். கோயில் நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படுகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைவனை போற்றக்கூடிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 15 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.


அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படவுள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டவுடன், அறநிலையத்துறையின் பொற்காலம், இன்னும் சில மாதங்களில் உருவாகும். அந்தவரிசையில் இன்று ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய 12,959 கோயில்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை இன்று நான் தொடங்கி வைக்கிறேன்.


இதனால், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும். மன்னிக்க வேண்டும். இதை நான் செலவு என்று சொல்லவில்லை. இதன்மூலம், 13,000 குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள். ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களில் வைப்பு நிதி 2 லட்ச ரூபாயாக அதிகரித்துத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது


குறிப்பாக,சட்டமன்றத்தில் இதுவரை யாரும் செய்யாத,கேள்வி படாத 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் வெளியிட்டார்.அது ஒரு பெரிய சாதனை.


மேலும்,முக்கியமாக திருக்கோவில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.கோவில் பணியாளர்கள்,அர்ச்சகர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டி தரப்பட உள்ளது.இந்த பணிகள் முடிக்கப்பட்டால் அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகும் காட்சியை நாம் காணப் போகிறோம்.


அமைச்சர் சேகர்பாபு, 'செயல்பாபு' என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷