ஒரு வரிச் செய்திகள்

 


       👤அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த மூன்று வருடங்களில் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டுவார் - உதயநிதி ஸ்டாலின்


   👤 திருப்பூர் : 100% பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கிய பின்னலாடை நிறுவனங்கள்


     👤மதுரையில் கொரோனா தொற்று பாதித்த பச்சிளம் குழந்தை பலி; 13ஆம் தேதி முதல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு - சுகாதாரத் துறை தகவல்


    👤COVID19 நிவாரணநிதியாக TNCMPRF-இல் ரூ.353 கோடி நன்கொடை பெறப்பட்டிருக்கிறது.


கொரோனா தடுப்புப் பணி - மருந்து, ஆக்சிஜன் கொள்முதல் ஆகியவற்றுக்காக ஏற்கனவே ரூ.166.40 கோடி ஒதுக்கப்பட்டது!


  மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது.


    👤கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி


    👤ஒசூர் அருகே குடிபோதையில் இரண்டு தரப்பினர் இடையே மோதல்; ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது.


    👤இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு


    👮👤மே மாதம் 4 லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 40,000ஆக குறைந்துள்ளது


* கடந்த 8 நாட்களில் மட்டும் 4.61 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது 


- மத்திய சுகாதாரத்துறை


    👤கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தம்பதி உயிரிழப்பு


    👤சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடித்த வழக்கில் 3ஆவது கொள்ளையன் கைது 


    👤தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நஜிம் ஹூசைன் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்


    👥👮சிவகாசி அருகே #வெடி விபத்து நடந்ததாக கூறிய ஆலையில் விதிமீறி #பட்டாசுகள் தயாரிப்பு-சப்கலெக்டர் கண்டுபிடித்து #சீல் வைத்தார்


    👤ஜூலை 19முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை


    👮👤அமெரிக்க நிறுவன தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி


அமெரிக்க நிறுவன தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி


நிருபர் பாலாஜி


🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏