ரிப்பன் மாளிகையில் மீண்டும் தமிழ் வாழ்க, வளர்க பலகை வைக்கப்பட்டது

 


   சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பராமரிப்பு காரணமாக தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை அகற்றப்பட்டது.நீண்ட நாட்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது, 


இதனை அடுத்து ரிப்பன் மாளிகையில் பராமரிப்பு காரணமாக தமிழ் வாழ்க, தமிழ் வளர்க பெயர் பலகை அகற்றப்பட்டது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.


மேலும், ரிப்பன் மாளிகை பராமரிப்பு பணி 90 விழுக்காடு நிறைவடைந்ததை அடுத்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான இன்று (03-06-21)மீண்டும் அப்பலகைகள் திறக்கப்பட்டன.                          


அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பலகையினை திறந்து வைத்தனர்.



 மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், மாநகராட்சி ஆணையர் ககன் சிங் பேடி உள்ளிட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


                                நிருபர் ,கார்த்திக்