*ஜூன்.21 தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு*முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு*
கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி. *
வரும் திங்கள் முதல் டாஸ்மாக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பு
கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி கண்கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டுமணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.. *
பள்ளி, கல்லூரிகள்,பல்ககலைகழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி*
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி.*வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.*
ஏற்றுமதி நிறுவனங்கள் 25% சதவீத பணியாளர்களுடன் அனுமதி.* இதர தொழிற்சாலைகள் 33% சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.* 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.*
செல்போன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.* வேளாண் உபகரணங்கள், பம்பு செட்டு பழுது நீக்கும் நிறுவனங்கள், மண்பாண்டங்கள் கைவினை பொருள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.*
தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.* வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.*
பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி.
சைக்கிள், பைக் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதி.
கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதிஇவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிருபர் .பிரகாசம்