சென்னை மே 19 ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஜெயின் ஆர்கனைசேஷன் ஒத்துழைப்புடன் 7 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வசதி கூடிய பஸ்
சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிசன் வசதியுடன் படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலையில்,கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் ஜெயின் ஆர்கனைசேஷன் அமைப்பினர்
7 நோயாளிகள் ஒரே நேரத்தில்,ஆக்ஸிஜனோடு சிகிச்சைபெறும் வசதிகொண்ட பேருந்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இதனை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்.மூர்த்தி துவக்கி வைத்தார்.மருத்துவமனை டீன் மற்றும் நிலைய மருத்துவர் உடனிருந்தார்கள்.
நிருபர் பாலாஜி