ஊரடங்காள் வாழ்வாதாரம் பாதித்த ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார் துணை ஆணையர்

 


  🙏ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான ஏழை எளிய பொதுமக்களுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் மதிய உணவு வழங்கினார்.


சென்னை:  (27-05-2021) இன்று புதுவண்ணாரப்பேட்டை கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவினால் சாலையோரம் ஆதரவற்றவர்கள் மற்றும் வேலை வாய்ப்பின்றி உணவு  இன்றி  தவிப்பவர்களுக்கு 

                     


வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையர் திருமதி சுப்புலட்சுமி அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை, செரியன்நகர், டோபிக், ராயபுரம் செட்டி தோட்டம், பழைய வள்ளலார் நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தெருவோரம் வீடு இன்றி தவிக்கும் ஏழை எளியவர்களுக்கு சிறுவர் சிறுமியர்களுக்கு  இன்று மதிய உணவு வழங்கினார் துணை ஆணையர்.