காவல் துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம் காவல் ஆணையர்

 


            சென்னை பெருநகர காவல்


சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக ஹைடெக் ஏ பிளாக் விடுதி வளாகத்தில் காவல்துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம்.


இன்று 27. 4 .2021

காலை சென்னை கோட்டூர்புரம்  அண்ணா பல்கலைக்கழக   புதிய ஏசி டெக் நியூ பிளாக் விடுதி வளாகத்தில்  கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மற்றும் காவல்துறையினருடைய குடும்பத்தினர்க்கு  சிகிச்சை அளிக்கும் மையம் covid-19 கேர் சென்டர் PHASE- II மையத்தை

 சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்து நோய் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 39 காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் நலம் விசாரித்தும் பணியில் இருந்த மருத்துவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோருக்கு மனமார்ந்த நன்றியை சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக பகிர்ந்தார்கள் 



இந்த காவலர் சிகிச்சை மையத்தில் 360 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேர மருத்துவர்கள் பராமரிப்பு உடன் ஆம்புலன்ஸ் வசதி. இலவச தரமான உணவு மருந்துகள் வழங்கப்படுகிறது.