தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வெளியிட்ட ‘வலிமை’ விளம்பரம்

 


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ‘வலிமை’ என்ற தலைப்பில் தேர்தல் ஆணையம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம், புதிய நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ‘வலிமை’ என்ற தலைப்பில் தேர்தல் ஆணையம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த விளம்பரத்தில், ‘ஜனநாயகத்தின் வலிமை ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது, 100% ஒட்டு இந்தியர்களின் பெருமை’ என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்லக் கூடாது. ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.