இன்று ஒரு தகவல்

 


எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை  தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.

வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.

பொதுவாக விழாக்கள் திருமணங்கள் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் வாழையிலை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வாழை இலையை பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பது பற்றி இதுவரை பலரும் அறியாமல் உள்ளனர். 

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்


வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.

இன்றுபலரும் உணவை தவிர்ப்பதால் குடலில் அல்சர் அதாவது குடல் புண் ஏற்படுவதனால் வாயில் புண் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு வாழை இலையில் சாப்பிடும்போது வாய்ப்புண் குணமாகும். 

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள  நச்சுக் கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

அதுபோலவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உணவை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதை வாழை இலையில் பார்சல் செய்தால் அந்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

தீக்காயம் ஏற்பட்டவர்கள் உடைக்கு பதிலாக வாழையிலை தான் பயன்படுத்தப்படுகிறது. தீக்காயம் ஏற்பட்ட பின் அவர்களை வாழை இலையின் மீது படுக்க வைப்பர். ஏனென்றால், வாழையிலையில் சூட்டின் தாக்கத்தை குறைக்கும் தன்மை அதிகமாக உள்ளது.

வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை.இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?  

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
 
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப்  புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. 

நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட  ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் படுக்கவைத்து, காலையில் சூரிய ஒளியில் காட்டினால், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். மேலும் காயம், தோல் புண்களுக்கு ஏற்படும் போது தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து, புண்மேல் தடவி, வாழை இலையை மேலே கட்டு கட்டி வைத்தால் புண்கள் விரைவில் குணமாகும்.

திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும்  வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான்  அவ்வாறு செய்தான்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்