இன்று ஒரு ஆன்மிக தகவல்

 

தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. விநாயகரின் உருவ அமைப்பில் இருக்கும் தத்துவம் ஐந்து பெரும் சக்திகளைக் காட்டுவதாகும். மடித்து வைத்துள்ள ஒரு பாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவரது மார்புப் பகுதி நெருப்பையும், இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும், அவற்றின் நடுவே வளைந்துள்ள கோடு ஆகாயத்தைக் குறிப்பதாகவும் அமைகின்றது. 

விநாயகர் பஞ்சபூத சந்திரன் அம்சமானவர் ஆவார். மனிதனின் மனதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீனி, முரட்டுத்தனம், மென்மையான குணம் போன்றவற்றையும் வெளிப்படுத்தும் உருவமாக இருக்கின்றார் விநாயகர்.

விநாயகரின் 16 பெயர்கள்!
சுகர் - அழகிய முகம் கொண்டவர்
ஏகதந்தர் - ஒற்றைத் தந்தம் கொண்டவர்
கபிலர் - பழுப்பு நிறமானவர்
கஜகர்ணர் - யானை காது கொண்டவர்
லம்போதரர் - பெரிய வயிறு உடையவர்
விகடன் - புத்திக்கூர்மை மிக்கவர்
விக்னராஜர் - தடைகளை அகற்றுபவர் அல்லது அழிப்பவர்
விநாயகர் - மேலான தலைவர்
துமகேது - அசுரன் தாமோதரனை வென்றவர்
கணாத்யட்சர் - பூதகணங்களுக்கு எல்லாம் தலைவர்
பாலச்சந்திரர் - பிறை சந்திரனை சூடியவர்
கஜானனர் - யானை முகம் கொண்டவர்
வக்ரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்
சூர்ப்பகர்ணர் - முறம் போன்ற காது கொண்டவர்
ஹேரம்பர் - ஐந்து முகங்களை கொண்டவர்
ஸ்கந்த பூர்வஜர் - கந்தன் எனும் முருகனுக்கு முன் பிறந்தவர்

* வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை செய்து ஏழைப்பெண்களுக்கு தானம் அளித்தால் திருமணத்தடை நீங்கும்.


* மேற்கு நோக்கிய அரசமரத்தடி விநாயகரை பூச நட்சத்திரத்தன்று அபிேஷகம் செய்து வழிபட்டால் பணக்கஷ்டம் தீரும். செழிப்பான வாழ்வு அமையும்.


* உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், பசுநெய், விளக்கெண்ணெய் கலந்து விளக்கேற்றி விநாயகரை வழிபட தொழிலில் லாபம் அதிகரிக்கும்.


* செவ்வாய், வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு, சதுர்த்தி நாளில் கணபதி ஹோமம் செய்தால் தடையனைத்தும் விலகும்.


* தஞ்சாவூரில் உள்ள சக்ரபாணி கோயிலில் விநாயகர் சங்கு, சக்கரத்தோடு உள்ளார்.
* ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் குழலுாதும் விநாயகர் கோயில் உள்ளது.


* பெற்றோருடன் விநாயகர் அமர்ந்திருக்கும் கோலத்தை கஜமுக அனுகிரஹ மூர்த்தி என்பர். விநாயகர் வீற்றிருக்கும் உலகத்தை ஆனந்த புவனம் என்பர்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்