சென்னை மின்சார ரயிலில், வரும் 23 ஆம் தேதி முதல் அனைத்து பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது.
சென்னை மின்சார ரயிலில், வரும் 23 ஆம் தேதி முதல் அனைத்து பெண் பயணிகளுக்கும் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து காலை 7 -10 மணி வரையலும் மாலை 4:30 -7:30 மணி வரையும் இயக்கப்படும். ஆனால், அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த நேர கட்டுப்பாடு கிடையாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து பயணிகளும், நேரக் கட்டுப்பாடு எதுவும் இன்றி நாள் முழுவதும் பயணிக்கலாம். அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.