தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தது.
இதனிடையே அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
கூட்டம் நிறைவடைந்த பின் ,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறுகையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிபார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. எம்எல்ஏ-க்கள் அனைவரும், அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை தலைமைக்கழகம் வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.