திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம்

 



கரோனா பரவல் காரணமாக திருமலை திருப்பதியில் கடந்த மார்ச் மாதம் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.


அதன்பின்னர் கடந்த ஜூன் மாதம் கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.


அதன்விளைவாக, திருப்பதியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் 2 அர்ச்சகர்கள் தொற்றுக்குப் பலியாகினர். இதையடுத்து, கோயில் நடை மூடப்பட்டது.


திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் 26.10.2020  முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’நாளை 26.10.2020 முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது என்றும், இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.