உ.பி பாலியல் வன்கொடுமை : பிரார்த்தனைக் கூட்டம்

 



டெல்லியில் உள்ள மகாராஷி வால்மீகி கோயிலில் பிரார்த்தனைக் கூட்டத்தில்  பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.


உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.


இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவிக்கும் டெல்லியில் உள்ள மகாராஷி வால்மீகி கோயிலில்  பிரார்த்தனைக் கூட்டத்தில்  பிரியங்கா காந்தி   கலந்து கொண்டார்.மேலும் அவர் கலந்துகொண்டு பிராத்தனை செய்தார்.