அடுத்த நூறாண்டு வரை வெற்றி இயக்கமாக கட்சியை உருவாக்குவேன்


அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அடுத்து முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

 

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து உள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,  எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தில் ஜெயலலிதா இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, அடுத்த முறையும் இந்த வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அ.தி.மு.க.வை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லவும், ஜெயலலிதா கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கட்சியை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன். என்று கட்சியின் உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.