விஜயகாந்த் டிஸ்சார்ஜ்

 



விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 


கடந்த மாத இறுதியில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனையை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டார். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா உறுதியானது அடுத்து அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


 உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து  இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்கள்.பின்னர் கடந்த 6 ஆம் தேதி விஜயகாந்த் இரண்டம் கட்ட பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 


விஜயகாந்த் அவர்கள் , மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் ,அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, அவர் இன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.