மக்களவை காலியிடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு


மக்களவையில் உள்ள உறுப்பினர்களின் காலியிடங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தற்போது தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.

 


  • உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ஹர்தீப்சிங் பூரி (சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி),

  • ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்),

  • சந்திரபால்சிங் யாதவ்,

  • ஜாவீத் அலிகான்,

  • அருண்சிங், நீரஜ் சேகர்,

  • பி.எல்.புனியா,

  • ரவி பிரகாஷ் வர்மா,

  • ராஜாராம்,

  • வீர்சிங் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர் ராஜ் பப்பார் ஆகியோரது பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.


இதனை முன்னிட்டு இந்த காலியிடங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. இதன்படி 11 இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி திங்கட்கிழமை நடைபெறும்.

 

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு அடுத்த மாதம் 2-ந் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.