நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. மாநிலங்களுக்கு கடன் வழங்க, ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் நிதியமைச்சர் கூறியிருந்தார்.
தமிழக அரசு கேட்டுள்ள 12 ஆயிரம் கோடி நிலுவை தொகை என்பது சட்டப்படி மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை என்றும் இதனை கொடுக்காமல் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது முற்றிலும் சட்டத்திற்கு புறபானது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு, அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் கூறியதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.